பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 2 of 15

எமை காத்த எம் மூத்தவர்..

இந்த நொடியில் நினைத்துப் பார்த்தால் அப்படி ஒரு காலம் இருந்தது என யாராலும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அப்போது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருந்தார். நாடெங்கிலும் பதற்றம். தமிழ் உணர்வு தடை செய்யப்பட்ட உணர்வாக மாறி அது தேசத் துரோகமாக கருதப்பட்ட காலம். தமிழர்கள் இந்திராவின் மகனை கொலை செய்து விட்டார்கள் என எல்லோரும் பழி சுமத்தி, ஒரு தேசிய இனத்தேயே தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி தாழ்த்திய நேரம்.

அப்போதுதான் மதுரைக்குப் பக்கத்தில் திருபுவனம் வட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து சட்டம் பயின்று உயர்நீதிமன்றத்தை தனது தேர்ந்த ஆங்கிலப் புலமையினால் அதிர வைத்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் தலை நிமிர்ந்தான்.

உயரமான தோற்றம். தோற்றத்திற்கு ஏற்றாற் போல் இன உணர்வின் கொற்றம்.

சந்திரசேகர் என்கின்ற அவரது பெயருக்கு பின்னால் தடா சட்டத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றிய சட்ட மேதமை இணைந்ததால் அவர் தடா சந்திரசேகர் ஆனார். துணிச்சல் அவரது உடன் பிறந்த பெருங்குணம். இன உணர்வு அவரது உதிரத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்ற அருங்குணம். சீற்றமும் துணிச்சலும் சட்டப் புலமையும் நிறைந்த வாதங்களால் ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு அன்று ஒட்டுமொத்த உலகமே கைவிட்டிருந்த தமிழர்களை காப்பாற்ற துணிந்தார்.

உலகமே கைவிட்டிருந்தபோது இருள் நிறைந்த குழிக்குள் விழுந்து கிடந்த 26 தமிழர்களுக்கு கிடைத்த ஒற்றை நம்பிக்கை அந்தப் பெருமனிதர் தடா சந்திரசேகர் தான். அக்காலங்களில் இயக்கப் பெயரை யாரும் பயன்படுத்த முடியாது. தலைவர் பெயரை யாரும் சொல்ல முடியாது ‌. காவல்துறை உளவுத்துறை மத்திய அரசு மாநில அரசு என எல்லா திசைகளிலும் நெருக்கடி. எதற்கும் அந்த மனிதர் அஞ்சியதில்லை. தடை செய்யப்பட்ட இயக்கம்.தடை செய்யப்பட்ட தலைவர். தடை செய்யப்பட்ட மனிதர்கள்.

ஆனாலும் அவர்தான் இயக்கத்தின் வழக்கறிஞர். தலைவரே மதிக்கின்ற சட்டத்தரணி.

தலைவரின் பெற்றோர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தேடி வந்துப் பார்த்த பெருந்தகை நமது மூத்தவர் தான். தலைவரின் குடும்பத்திற்கு அவ்வளவு நம்பிக்கை அவர் மேல். அதேபோல் அன்னை பார்வதி அம்மாள் இறந்த போது ஈழத்திற்கே சென்று இறுதிச்சடங்குகள் செய்ய உடன் இருந்தவர் நமது மூத்தவர் தடா சந்திரசேகர் அவர்கள்.

தமிழர்களின் ஆன்ம உணர்ச்சியான ஈழ விடுதலை உணர்வு என்பது என்றும் தமிழ்நாட்டில் மங்கி விடக் கூடாது அது சுடர் விட்டு பெரும் தீயாய் பரவ வேண்டும் என்ற நோக்கில் நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அவர்கள் உருவாக்கிய போது அதன் முதுகெலும்பாய் மாறி கட்சியின் பொதுச்செயலாளராய் வழிநடத்தியவர் நம் மூத்தவர்.

கம்பீரமான மனிதர் அவர். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு நேராக சொல்வதற்கு அவர் என்றுமே தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு கருத்துதான். அது தன் தம்பி சீமானின் நலம். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார். ராஜிவ் கொலை வழக்கில் சிக்குண்டு 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து தற்போது முகாமில் வதைப்பட்டு வருகிற அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்கள் பரோல் மூலம் வெளிவரும்போது ஈழ நாட்டவரான அவர் இங்கே தமிழ்நாட்டில் யார் வீட்டிற்கு செல்வது என சிந்தனை ஏற்பட்டபோது.. “உடன் பிறந்த அண்ணன் மூத்தவன் நான் இருக்கிறேன்.. வா தம்பி என் வீட்டிற்கு..” என அழைத்த எங்களது மூத்தவர் போல யார் உண்டு.. இனி எங்களுக்கு..

விடுதலைக்கு விலங்கு என்ற‌ அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கும் போது வழக்கு கோப்புகளை பெற அவரது அலுவலகத்திற்கு சென்ற போது முக்கியமான மனிதர்கள் அவருக்காக காத்திருந்தார்கள். சிறியவனான என்னை அழைத்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். “முக்கியமான நிறைய மனிதர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் மூத்தவரே..” என சொன்னபோது.. “அது பணத்திற்காக.. உன்னிடம் பேசுவது என் இனத்திற்காக . என் இனத்தை தாண்டி எனக்கு எதுவும் இல்லை..” என சொல்லிவிட்டு அவருக்கே உரிய கம்பீரமான சிரிப்பை சிரித்தார்.

வேலூர் சிறையில் அண்ணன் சீமான் அடைக்கப்பட்டு இருந்த காலத்தில் கட்சி தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தது. அண்ணன் இல்லாத சூழலில் இனி என்ன செய்வது என்கின்ற ஒரு கையறு நிலை. அந்த நேரத்தில் மூத்தவர் மீதுதான் அனைவரின் நம்பிக்கையும். அவரும் அண்ணனையும் மீட்டு கட்சியையும் காத்தார்.

அவர் அருகில் இருந்தாலே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி எங்களுக்கெல்லாம். அமைப்புத் தொடர்பாக மாநில பொறுப்பாளர்கள் யாரிடமாவது அண்ணன் சீமான் 10 சொற்கள் பேசினால் அதில் இரண்டு “மூத்தவரிடம் கேட்டு விடுங்கள்..” என்பது தான்.

அண்ணன் சீமானுக்கும் அவருக்குமான உறவை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. ‘மூத்தவர்’ என்று அண்ணன் சீமான் என்று அழைத்தாரோ தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் ‘மூத்தவராக’ மாறிப் போனார்.

கம்பீரமான மனிதர் அவர். தோற்றமும் குரலும் எதிரே நிற்பவரை சட்டென சிறியவராக்கி காட்டும் கம்பீரம் அது.

ஈரோட்டில் கிழக்கு இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் பிரச்சாரப் பணிக்கு வந்திருந்த போது நானும் தம்பி ஆனந்தும் மூத்தவரை அவர் தங்கும் இடத்திற்கு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற அந்த இரவில் “என் பசங்கடா நீங்க‌..” என்று சொன்ன அந்த சொற்கள் இன்னும் காற்றில் மிதந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நள்ளிரவில் தமிழின உணர்வாளர்களுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரை அலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிளாசிக் ஆங்கிலத்தில் புரட்டி எடுத்து கேள்விகள் கேட்டு திகைக்க வைத்த அவர் ஆளுமை பார்த்து நான் எல்லாம் மிரண்டு போயிருந்தேன்.

யாரிடமும் ஒரு அலைபேசி அழைப்பு மூலம் அவரால் ஆணையிட முடிகிற அளவிற்கு ஆளுமை. ஆனால் அண்ணன் சீமானிடம் மட்டும் எதையும் எதிர்பார்க்காத அடி மன ஆழமான அன்பு.

தனது சட்ட ஆற்றல் மூலம் தடுப்பு முகாமில் இருந்து எத்தனையோ தமிழர்களை மீட்டு புலம் பெயர் தேசத்திற்கு அவர்தான் அனுப்பி வைத்தார். தமிழின உரிமை களங்களில் தமிழர் யார் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக வாதாட “தடா சந்திரசேகர்” என்கின்ற நம்பிக்கை எப்போதும் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தது. அதுதான் இன்று இந்த இனத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் இப்படித்தான் நம்மை தவிக்க விட்டு சென்றார். பிறகு தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது. இப்போது மூத்தவர்.

எங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்ட மூத்தவர் அவர் உடல் நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்து இருக்கலாம். என்ன செய்வது.. இரக்கமற்ற கொடியவனாக இந்தக் காலம் நம் கழுத்தில் ஏறி நிற்கிறது.

மூத்தவரே சென்று வாருங்கள். உங்கள் உயிர் தம்பியோடு உயிருள்ளவரை நாங்கள் நேர்மையாக உடன் இருப்போம்.அதுதான் உங்களுக்கு நாங்கள் காட்டும் மரியாதை என்பதை அறிவோம்.

எந்தக் கனவின் மூலமாக எங்களுக்கு நீங்கள் மூத்தவரானீர்களோ அந்த விடுதலை கனவிற்காக எம் உடல் மண்ணில் சாயும் வரை உங்களைப் போன்றே புலிக்கொடி ஏந்தி போராடுவோம்.

கண்ணீர் வணக்கம்.

எதிர் கருத்துக்களை கையாளும் கலை.

————————————-

* நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும்..

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிக உச்சத்தில் இருக்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு காலத்தில் டீக்கடைகளிலும், தெருமுனைகளிலும், கடைத்தெருகளிலும், சலூன் கடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசப்பட்டு வந்த அரசியல் இன்று மெய்நிகர் தளங்களில் (Virtual Space) பேசப்பட்டு வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற மெய்நிகர் தளங்களில் வினை /எதிர்வினை ஆற்றுபவர்களை நேரடியாக நமக்கு தெரியாது. அவர்களின் பின்புலம், அவர்களது பலம் /பலவீனம் எதுவும் தெரியாது. அந்தந்த நேரத்து கருத்துச் சண்டை அவ்வளவே. எனவே கவனம் முக்கியம்.

சமூக வலைதளங்களில் வருகின்ற எதிர்மறை கருத்துக்களை கையாளுவது என்பது நம்மில் பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது. பல நேரங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை பரப்புகின்ற மிகப்பெரிய நபராக நாமே இருந்து விடுகிற ஆபத்தும் இந்த இணைய உலகில் இருக்கிறது. ஆர்குட் காலகட்டத்தில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் என பல்வேறு சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படுகின்ற கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதற்கான உளவியல் புரிதல் நமக்குள்ளாக தேவையாக இருக்கிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் அண்ணன் சீமானை பற்றி எந்த ஒரு விமர்சனம் வந்தாலும், அதற்கான எதிர்வினையை செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பது என்பது அவர்களது இனப்பற்றினை காட்டுகிறது.அதே சமயத்தில், எதிர்வினை செய்கிறோம் என்ற பெயரில் நம் குறித்தான ஒரு எதிர்மறைக் கருத்தை நாமே விளம்பரம் செய்யக்கூடிய ஆபத்தும் இதில் இருக்கிறது. இந்த விளம்பரத்திற்கு ஆசைப்பட்டுதான், நம் குறித்தான எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் தொடர்ச்சியான ஆதாரம் அற்ற அவதூறுகளை, வசவுகளை, குற்றச்சாட்டுகளை நம் மீது ஏறி வருகிறார்கள். அண்ணன் சீமான் பெயர் இருந்தாலே நாம் விரைந்து சென்று அந்த காணொளியை பார்த்து விடுகிறோம்.அதற்கு பதில் சொல்லவும் தயாராகி விடுகிறோம். இதனால் நம் எதிரி இரண்டு லாபங்களை அடைகிறான். ஒன்று காணொளியை பார்க்க வைத்து நம் மூலமாக அவனுக்கான வருமானத்தை பெறுகிறான். அடுத்தது அவன் காணொளிக்கு நம்மையே விளம்பரம் செய்ய வைக்கிறான்.

எனவே இது போன்ற எதிர்மறை பதிவுகள் நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு விதமான மறைமுக அழைப்பு. நாமும் பதில் சொல்கிறோம் என்ற பெயரில் யாருமே கவனிக்காத அந்த பதிவினை எதிர்வினை செய்து எல்லோரும் கவனிக்க வைக்கின்ற பதிவாக மாற்றுகின்ற தவறினையும் இழைக்கின்றோம்.

இங்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இணையதள உறவுகள் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சில எண்ணங்களை பகிர்ந்து உள்ளேன். இதைப் படித்துவிட்டு உங்களுக்கும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதையும் இங்கே பகிரலாம். இது அறிவுரைகளின் தொகுப்பு அல்ல. ஆலோசனைகள் அது சார்ந்த உரையாடல்கள் மட்டுமே.

1. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என துடிக்காதீர்கள். சில அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு நம் மௌனத்தை விட மிகச் சரியான பதில் வேறு எதுவும் இல்லை.

2. எப்போதும் மதிப்பு மிகுந்த சொற்களால் எதிரியை அணுகுங்கள். அவன் கருத்தை மட்டும் எதிர்க்கிற உங்களது மதிப்பு மிகுந்த சொற்கள் அவனை பதட்டப்படுத்தும். பலவீனமடைய செய்யும்.

3. எந்த விளக்கங்கள் கொடுத்தாலும் ஏற்காமல் தொடர்ந்து அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள்.அவர்களை மாற்ற நாம் பிறக்கவில்லை. அவர்கள் மாறவும் போவதில்லை. எனவே கண்டு கொள்ளாமல் கடந்து விடுவது அவரது விமர்சனத்தை மதிப்பற்ற ஒன்றாக மாற்றும்.

4. பதிவுகள் எழுதும் போது தர்க்கங்களாக வகுத்துக் கொண்டு, ஆதாரங்களோடு பதில் அளியுங்கள். கூடுதலாக நம் எதிரிகள் செய்த வரலாற்றுப் பிழைகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் படித்து ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாலே போதும். இவர்களின் கதை முடிந்து விடும்.

5. விமர்சனங்களை எழுதும்போது பெரும்பாலும் அதிக எழுத்துப்பிழை, கருத்துப் பிழையில்லாமல் எழுதுங்கள். அண்ணன் சீமான் எங்களைப் போன்றவர்களிடத்தில் அடிக்கடி வலியுறுத்துவது இதுதான். ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருங்கள். பிழைகளை திருத்துங்கள். வாக்கியங்களை செம்மைப்படுத்துங்கள். கூர்ந்த சொற்கள் அனைவராலும் ஈர்க்கப்படும்.

6. இதுதான் மிக மிக முக்கியம். நம் குறித்தான எதிர் கருத்திற்கு பதிலளிக்கும் போது விமர்சனங்களை அப்படியே எடுத்து பகிர்ந்து விட்டு பதில் அளிக்க தேவையில்லை. அது நம் எதிர்க்கருத்திற்கான விளம்பரத்தை பெற்றுத் தரும். கருத்திற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. இன்று கூட ஒன்றை கவனித்தேன். யாருமே கவனிக்காத மதிப்பற்ற மலிவான இழிவான கார்ட்டூன் ஒன்றினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் நமது ஆட்களே பரப்பிக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதை பொருட்படுத்தாமல் இருந்தாலே போதும். அதுவே இல்லாமல் போய்விடும்.

5. ட்வீட்டர் போன்ற தளங்களில் நமது கட்சியின் நிலைப்பாடுகளை மிகச் சரியாக எழுதுகிற கட்சி உறவுகளின் பதிவுகளை நிறைய பரப்புங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொண்டால் தான் நம் சார்பான கருத்துக்கள் இணையவெளி எங்கும் நிரம்பி இருக்கும்.

6. அண்ணன் சீமான் அவர்கள் பேசிய காணொளியை சிறுசிறு துண்டுகளாக நமது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் உறவுகள் எப்போதும் வடிவமைத்து அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது ,அதை எல்லா இடங்களிலும் பரப்புவது தான். அண்ணன் சீமான் அவர்களது சிறு காணொளித் துண்டுகள் எதிர் கருத்துக் கொண்டவர்களால் கூட விரும்பப்படுகிறவைகளாக உள்ளன.

6. ஒரே பதிவில் அடுத்தடுத்து பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சொல்ல வேண்டிய பதிலை வலிமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாலே போதுமானது. எதிரி வைக்கும் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளித்துக் கொண்டே இருந்தால், நாம் இயங்க நேரம் இருக்காது.

7. அரசியல் சார்ந்து நிறைய புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தினை நமது உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதளம் சார்ந்து இயங்குகின்ற உறவுகள் தமக்குள்ளாக ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.நன்கு படிப்பவர்களின் பதிவுகள் தனித்து தெரியும்.

8. காணொளி பதிவுகளாக பதில்களை சொல்ல விரும்பும் உறவுகள் போகிற போக்கில் ஒரு காணொளி போடுவதை தவிர்த்து, ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து தேர்ந்த ஒளியில் நல்ல ஒலித் தரத்தோடு என்ன பேச வேண்டும் என்கின்ற முன் தயாரிப்போடு காணொளியை தயாரிக்க வேண்டும். அதை சீரிய முறையில் எடிட் செய்து சிறந்த முறையில் வெளியிட வேண்டும். தொடர்ந்து வெளியிடுகிறவர்களாக இருந்தால் நீங்களும் ஒரு youtube சேனல் தொடங்கலாம்.

9. நாம் யார் என இந்த உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என்கின்ற எண்ணம் நமக்கு எப்போதும் வேண்டும். நமது சொற்களால், நமது பதிவுகளால், நம் கட்சியின் மாண்பிற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டு விட கூடாது. தவறான ஒரு பதிவு ஏற்படுத்தும் விளைவைக் காட்டிலும் பதிவு எழுதாமல் இருப்பது மிகச் சிறந்தது.

10. அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்கள் குடும்பத்தாரோடு இருக்கின்ற புகைப்படங்களை பெரும்பாலும் பதிவிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல எதிர் தரப்பினரின் கருத்தை மட்டுமே எதிர்த்து விட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்ப்பது நமக்கான மதிப்பினை உயர்த்தும்.

இறுதியாக ஒன்று.

எதற்கு பதில் அளிக்க வேண்டும், எதற்கு பதில் அளிக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டாலே சமூக வலைதளங்களில் இப்போது இருக்கும் நிலையை காட்டிலும் புலிக்கொடியை இன்னும் உயர பறக்க விடலாம்.

அதற்குத் தேவை..

ஒவ்வொரு பதிவிற்கும் முன்னதாக இது தேவையா, தேவையில்லையா சரியா- தவறா, என்று கட்டாயமாக தோன்ற வேண்டிய ஒரு நிமிடச் சிந்தனை.

சிந்திப்போம்.

பற்ற வைத்த நெருப்பொன்று ..

———————————————————-

வரலாற்றில் சொற்கள் மிகப்பெரிய பங்கினை வகித்திருக்கின்றன. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று இருந்த சமயத்தில் ஹிட்லர் போன்ற உணர்ச்சிகரமான பேச்சாளர்களின் சொற்களே ஜெர்மனியை மீள் எழும்ப வைத்தன. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தோல்வி முனையில் இருந்த போது அதன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் பேசிய சொற்களே பிரிட்டனை நிமிர வைத்தன. ரஷ்ய புரட்சிக்கு புரட்சியாளர் லெனின் தொழிலாளர்களுக்கு மத்தியில் விதைத்த நம்பிக்கை மிகுந்த சொற்களே காரணம். கியூபா புரட்சிக்கு நீதிமன்றத்தில் நின்று புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ “வரலாறு எம்மை விடுதலை செய்யும்..” என முழங்கிய சொற்களே மூலக் காரணம். இப்படி வலிமை உடைய சொற்களைக் கொண்டவர்கள் கரங்களால் தான் வரலாறு காலங்காலமாய் எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் நாடகங்கள்/ திரைப்படங்கள் மூலமாக திராவிட இயக்கங்கள் எழுச்சி நிலைக்கு வந்த போது அதன் நட்சத்திர பேச்சாளர்கள் தான் ‘அரசியல் அதிகாரம்’ என்கின்ற அடுத்த நிலைக்கு அந்த அமைப்புகளை எடுத்துச் சென்றார்கள். இலக்கிய மேற்கோள்களும், அடுக்கு மொழி வசனங்களும் தான் பாமர மொழி கொண்டிருந்த படிக்காத மேதை காமராஜரை வீழ்த்தி திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.

மக்கள் மொழிகளின் ஊடாகத்தான் தங்களுக்கான தலைவர்களை மக்கள் அடையாளம் காணுகிறார்கள். எளிய மக்களை பொருத்த வரையில் மேடை என்பது கருத்துக்களை கேட்டுவிட்டு கடந்து போகும் இடம் அல்ல. தங்களுக்கான அடுத்த தலைவனை தேர்வு செய்கிற மாபெரும் களம். அந்தத் தலைவன் அந்த மேடையை எப்படி கையாளுகிறான், எது போன்ற மொழியை உதிர்க்கிறான், அவனது கோபம், உணர்ச்சி,அன்பு,கனிவு, ஆற்றல் அனைத்தும் அவனது மொழி மூலம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

கடந்த 2009 ஆண்டு இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு திரைப்படத் துறையினரால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தில் தமிழக அரசியலில் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கான பாய்ச்சல் குரல் ஒன்று ஒலித்தது.

அதுவரை பேச்சுத் தமிழ் என்று கட்டமைத்து வைத்திருந்த அனைத்து இலக்கண விதிகளையும் அடித்து நொறுக்கி பாமர மொழியில், பைந்தமிழ் அழகில் கேட்போர் உணர்ச்சியின் உச்சத்தில் துடிக்க, உக்கிர குரல் ஒன்று துயரத்தின் உன்மத்தத்தில் பிறந்தது. மேடைக்கும்-பார்வையாளனுக்கும் இடையே இருக்கின்ற மகத்தான இடைவெளியை உண்மையின் கனல் சுமக்கும் அந்தக் குரலின் உணர்ச்சி இட்டு நிரப்பியது. திராவிட இயக்கத்தின் ‘அண்ணாவிற்கு’ பிறகு, தமிழ்த் தேசிய தத்துவத்திற்கான “அண்ணன்” பிறந்த வரலாற்றுப் புள்ளி அதுதான்.

“பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது..” என அந்த குரல் கர்ஜித்த போது உண்மையிலேயே தமிழரின் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருந்த

இன உணர்வின் சிறுத்தை வெளியே வந்தது. “என்ன வியப்படா.. நாங்கள் தமிழர்கள்.. என்று அந்த குரல் முழங்கிய போது காலங்காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் பெருமித உணர்ச்சியால் தலை நிமிர்ந்தது.

இப்படி தனி மனிதனாய் தமிழக வீதிகள் முழுக்க பேசி பேசி இன அரசியலுக்கான ஒரு இளைஞர் கூட்டத்தை உண்டாக்கி விட முடியும் என நிரூபித்துக் காட்டியதில் அண்ணன் சீமான் ‘தனி ஒருவன்’ தான்.

அவரது சொற்கள் தான் தமிழகத்தின் அரசியல் வீதிகளை தீப்பிடிக்க எப்போதும் வைக்கின்றன. காயம் பட்ட இனத்தின் வலி சுமந்து வரும் அந்த சொற்கள் மேடையின் ஒழுங்கிற்கு ஆட்பட்டதல்ல. பற்றி பரவும் நெருப்புத் துண்டினைப் போல, திசை வெளி அற்ற, அந்த சொற்கள் தமிழக அரசியல் பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. ஒரே நேரத்தில் திமுக/ காங்கிரஸ்/பிஜேபி/அதிமுக என எல்லா திசைகளிலும் காற்று போல பரவி, அநீதியின் கழுத்தைப் பிடித்து வினாக்களை தொடுக்கும் அவரது சொற்கள் எதிரிகளை நிம்மதி இழக்கச் செய்கின்றன. “எம் இனத்தை அழித்தது காங்கிரஸ் என்றால், அதற்கு துணை போனது திமுக..” என்று ஒரு பக்கத்தில். “ஜெயலலிதா என்ன ஆங்கான் சுகியா, அன்னை தெரேசா வா..” என மறுபக்கத்தில். “நீ பேனா சிலை கட்டு அதை இடிக்கிறேனா இல்லையா என்று பார்..” என்று இன்னொரு பக்கத்தில். “காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால்,பாஜக மனித குலத்தின் எதிரி..” என்று எதிர்பக்கத்தில்.

எல்லா திசைகளிலும் அனல் குறையாத வெப்ப வீச்சு மாறாத ஒரே அலை வரிசையில் அனல் மொழிகள்.

யாரிடமும் சமரசம் கோராத, ஒருபோதும் மண்டியிடாத, நியாத்திற்காக சண்டையிடும் அவரது சொற்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஏந்துகின்ற ஆயுதங்களாக மாறி விட்டன.அவரது சொற்கள் எப்போதும் எதிரிகளை பதட்டத்திலும், நடுக்கத்திலும் ஆழ்த்துகின்றன.

நேற்று கூட வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மணிப்பூர் கலவரத்திற்கான போராட்டத்தில் அண்ணன் சீமான் பேசிய சொற்களை அறிவாலய ஒட்டு திண்ணைகள் வெட்டியும், ஒட்டியும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பரப்பிய போது, அவரது முழுமையான பேச்சை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை வெளியிட்டுள்ளார்கள்.

வேதனையும் ஆற்றாமையும் பொங்கி வழிந்த அவரது பேச்சு ஒரு எளிய மனிதனின் கோபம். 18 சதவீத வாக்குகளை கொண்ட கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பாஜகவிடமிருந்து திமுக காப்பாற்றும் என நம்பி எப்போதும் இழைக்கின்ற வரலாற்றுப் பிழையினால் நாம் எவ்வளவு இழக்கிறோம் என்பதை அவர் உடைத்து பேசியிருந்தது இதுவரை தமிழக அரசியல் பரப்புகளில் இருந்த சமன்பாடுகளை கலைத்து போட்டு இருக்கிறது. தேவாலயங்களிலும் பள்ளி வாசல்களிலும் பாவங்களுக்குக்காக மன்னிப்பு தேடி ஒன்று கூடுகிற நம்மவர்கள் செய்கிற ஆகப்பெரும் பாவம் பிஜேபி க்கு எதிரி திமுக என நம்பி வாக்களிப்பது. ஏனெனில் முதன் முதலாக பிஜேபியை கைப்பிடித்து தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே திமுக தான். ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏ ரைட் மேன் இன் ராங் பார்ட்டி என வாஜ்பாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்தது, பிள்ளையார் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது ,சிபி ராதாகிருஷ்ணனை வைத்து நல்லக் கண்ணுவை தோற்கடித்தது என திமுகவின் குற்றப்பட்டியல் மிக நீண்டது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குண்டு பன்னெடுங்காலமாக சிறைக்குள் வாடி வருகிற அப்பாவி இஸ்லாமியர்கள் விடுதலைக்கு திமுக எத்தகைய தடைகளை விதித்து வருகிறது என்பதை அண்ணன் சீமான் தான் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.

ஒருபோதும் திமுக பாஜகவிற்கு எதிரி அல்ல. பாஜக விடம் இருந்து திமுக யாரையும் காப்பாற்றாது. சொல்லப்போனால், தன்னை காப்பாற்றிக் கொள்ள அது யாரையும் பலியிடும் என்பதை தான் அண்ணன் சீமான் தன் சொற்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அநீதிக்கு துணை போவதும் அநீதியே என்று அவர் முழங்கியது

அந்தப் பேச்சை அறிவாலயத்து அறிவாளிகள் அப்படியே கடந்து போய் இருக்கலாம் தான். ஆனால் விதி… அதை வெட்டி ஒட்டி பரப்ப, உண்மையான பேச்சை நாடெங்கிலும் இருக்கின்ற நாம் தமிழர் இளைஞர்கள் பரப்பி வருகிறார்கள். எட்டு திக்கிலும் அண்ணன் சீமானின் மொழி காற்றில் பரவிக் கொண்டே கொள்கை விதைக்கிறது.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.

“அவனை எல்லாம் அப்படியே விட்டிடனும்..”

அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

விட்டு இருந்தால், இதுவும் ஒரு பேச்சு என அண்ணன் சீமானின் நேற்றைய ஆர்ப்பாட்டப் பேச்சு அமைதியாய் கடந்திருக்கும். பற்ற வைத்தவர்கள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது.

மெய்மையின் தீ அது. காலம் முழுக்க அறம் பாடி நடந்த ஒரு இன கூட்டத்தின் அடிநெஞ்ச குமுறல் அது.

அதில் இது தவறு அது தவறு அது பிழை இது சரி என்றெல்லாம் கணக்கு பார்த்தீர்கள் என்றால் , காலம் எழுதும் வரலாற்றுக் கடனில் நீங்கள் கரைந்து போவீர்கள்.

இ எம் எஸ் நம்பூதிரி பாட்- என்ற கனவு மனிதனும், கடந்த காலமான இடதுசாரிகளும்…

????

தற்கால இந்திய அரசியல் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது இந்த மண்ணிற்கு நேர்ந்த மாபெரும் அவலம் என்பதை எல்லாம் தாண்டி பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமை, சகோதரத்துவம், அமைப்பின் ஊடாக விவாதங்கள்/ உரையாடல்கள் மூலமாக கட்டி எழுப்பப்படும் ஜனநாயகம், போன்ற பல்வேறு அபூர்வமான அரசியல் கட்டுமானங்களை கொண்ட இடதுசாரி இயக்கங்கள் தனது இறுதிக் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என உண்மையிலேயே நமக்கெல்லாம் அச்சம் ஏற்படுகிறது.

இந்திய மண்ணுக்குரிய அடிப்படைத் தன்மைகளை இடதுசாரிகள் புரிந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் என்றோ இந்தியாவில் இருக்கின்ற மொழி வழி தேசிய இனங்களின் நலன்களை இடதுசாரிகள் புரிந்து கொள்ளாமல் வர்க்க நலன்களை மட்டும் சார்ந்து அரசியலை அணுகினார்கள் என்றோ அரசியல் சமரசங்கள் மூலமாக தாங்கள் உயிரெனக் கொண்டிருந்த கொள்கைகளை காவு கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றோ எழுகின்ற விமர்சனங்களை வேதனையோடு சமூக அக்கறை உள்ள எவராலும் அப்படியே கடந்து விட முடியாது.

ஏனெனில் இந்த பெரும் நில அரசியலில் இடதுசாரிகள் செலுத்திய தாக்கத்தினை கடந்த கால வரலாறு என்றும் அது ஒரு கனாக்காலம் என்றும் பெருமூச்சோடு சிந்திப்பவர்கள் சிறு எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகிறார்கள் என்பது ஜனநாயக அரசியலில் தற்போது எழுந்திருக்கிற மற்றும் ஒரு ஆபத்து.

2004 பாராளுமன்றத் தேர்தலில் 68 இடங்களை பிடித்த இடதுசாரிகள் அதற்குப் பிறகு அடைந்த பின்னடைவுகள் குறித்த விமர்சனக் கட்டுரை அல்ல இது. உண்மையில் இடதுசாரிகள் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை “அறிவுச்சுதந்திரமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் இளம் வயதில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பான்” என்கின்ற பொது மொழியை நம்புகிறவர்கள் தங்களுக்குள்ளாக சிந்திப்பதற்கான சில கேள்விகளையும் , 75 ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட திராவிட அரசியல் தலைவர்கள் இடதுசாரி தலைவர்களுக்கு எவ்வாறு எதிர்ப்புள்ளிகளில் இருக்கிறார்கள் என்கின்ற சிந்தனையையும் எழுப்ப இந்த கட்டுரை முயல்கிறது.

உண்மையில் இடதுசாரித்தனம் என்பது புரட்சிகர மனநலையோடு கூடிய எந்தவித தன்னல நோக்கமும் இல்லாமல், மக்களை நேசிக்கின்ற அபூர்வமான குணத்தாது. குறிப்பாக இடதுசாரிகள் கொண்டிருந்த, இன்னும் சிலரிடம் எஞ்சி இருக்கின்ற எளிமையின் அழகியல்.

சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இறந்த போது எழுதப்பட்ட ஒரு பதிவு ஒன்றினில் உம்மன் சாண்டி தன் வாழ்வில் கொண்டிருந்த எளிமையை காட்டிலும் அதற்கு முன்பாக இருந்த ஏகே ஆண்டனி மற்றும் இ எம் எஸ் நம்பூதிரி பாட் போன்ற கேரள முதல்வர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் என்று ஒப்பீடு செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழர்களாகிய நாம் எவ்வளவு மோசமான ஒரு அரசியல் சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. முதலமைச்சர்கள் பணிபுரிந்த தலைமைச் செயலக பேருந்து நிறுத்தத்தில் அவர்களது மனைவிகள் பேருந்து ஏறிய காட்சியும், ஏ கே ஆண்டனி பதவியேற்ற விழாவிற்கு கூட குடும்பத்தினரை அழைக்காமல் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள் என உறுதி காட்டியதும் , முதல்வர்கள் சாதாரண மனிதர்களாக இருசக்கர வாகனங்களில் தலைமைச் செயலகம் வந்ததும் எங்கு சென்றாலும் வரிசையில் நின்றதும் கேரள மண்ணில் இ எம் எஸ் என்கின்ற இடதுசாரி தலைவர் தந்த தாக்கத்தினால் தான்.

மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்த இ எம் எஸ் தனது இளம் வயதில் தனது குடும்ப சொத்துக்கள் மூலம் தனக்கு வர்க்கப் பார்வை வந்துவிடும் என்கிற கொள்கை உறுதியில் சொத்துக்களை விற்று அந்தக் காலத்தில் ஏறக்குறைய 1.80 லட்சம் ரூபாய் தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.

இதுவெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். திமுகவின் தோற்றம், திக பிளவு இரண்டுமே சொத்துப் பிரச்சனை அல்லது அடுத்த ட்ரஸ்டி பிரச்சனை என்கின்ற ஒற்றைக் காரணம் என்பதோடு நம் தமிழக நிலையை எண்ணி நாம் நம்மை எண்ணியே தலையில் அடித்துக் கொண்டு மேலே தொடர்வோம்.

இ எம் எஸ் நம்பூதிரி பாட் காலமானபோது “இ எம் எஸ் இல்லாத கேரளாவை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனி கலங்கியவாறு கூறினார்.

ஏனெனில் தங்கள் வாழ்வின் எளிமை மற்றும் நேர்மைக்கான எல்லா உள்ளொளி தன்மைகளையும் ஏகே ஆண்டனியும் இ கே நாயனாரும் உம்மன்சாண்டியும் இ எம் எஸ் அவர்களிடமிருந்தே பெற்றார்கள்.

ஏன் அது கேரளாவில் மட்டும் சாத்தியப்பட்டது தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்றெல்லாம் உங்கள் மனதிற்குள் எழும் ஆழ்மன கேள்விகளால் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை.

ஒரே ஒரு பதில் தான் அதற்கு.

அந்த மண்ணை தீவிரமாக மக்களை நேசித்த அதி மனிதர்களான இடதுசாரிகள் ஆண்டார்கள்.ஆனால் ஏறக்குறைய 75 ஆண்டுகள் காமராஜருக்கு பிறகு தமிழர் நாட்டை முதலாளித்துவ/பிழைப்பு வாத, ஊழல் மலிந்த திராவிட தலைவர்கள் ஆண்டார்கள்.

எல்லாமும் தலைகீழ் மாற்றமான பிறகு “மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பதுதான் இப்போதைய அரசியல் புது மொழி.அதற்கேற்ப தலைவர்கள் மக்களுக்கான சேவையான அரசியலைப் பிழைப்பாக்கினார்கள். மக்கள் பிரியாணி பொட்டலங்கள் வாங்கிவிட்டு, சாராயம் குடித்துவிட்டு ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் தமிழ்நாட்டு ஜனநாயகம்.

குறிப்பாக கேரளாவை ஆட்சி செய்த இந்திய நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் இ எம் எஸ் நம்பூதிரி பாட். 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத முதன்முதல் ஆட்சியை கேரளாவில் கம்யூனிஸ்டுகள் அமைத்தார்கள்.

வி ஆர் கிருஷ்ண ஐயர்,அச்சுத மேனன், பேராசிரியர் ஜோசப் முண்டே சேரி, உள்ளிட்ட மிகச்சிறந்த மேதைகளை அமைச்சர்களாக கொண்ட முதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி இ எம் எஸ் இவ்வாறாக உரையாற்றினார்.

“நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவன வகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம்.

மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைப்பை கோருகிறோம்.

We are being elected ‘Not as Representative of Party but as Representative of People’”

அதேபோல் முதன் முதலாக 1959 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 ஐ பயன்படுத்தி கலைத்த முதல் ஆட்சியும் இ எம் எஸ் ஆட்சி தான். அதற்கான எந்த காரணத்தையும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டு 1959 இ எம் எஸ் ஆட்சியை கலைத்த ஜவர்கலால் நேரு அவர்களுக்கு எழுபதாவது பிறந்த நாள் வருகிறது. தனது 50 வது பிறந்த ஆண்டில் இருந்த இ எம் எஸ் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட நேருவிற்கான சிறப்பு பிறந்தநாள் மலரில் நேரு எப்படிப்பட்ட தவிர்க்க முடியாத மனிதன் என்பதற்கான காரணங்களை அடுக்கி ஒரு அட்டகாசமான கட்டுரையை எழுதி வெளியிட்டு இருந்தார்.

மீண்டும் 1969 ஆம் ஆண்டு மீண்டும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்த போது அப்போது கட்சிப் பணிக்கு திரும்பி இருந்த இ எம் எஸ் கடும் முயற்சிகளை செய்து நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து உபரி நிலங்களை பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து சாதனை படைத்தார்.

தன் வாழ்நாள் முழுக்க எளிய மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த இ எம் எஸ் மிகச்சிறந்த கட்டுரையாளர். பிரண்ட்லைன் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் அரசியல் ரீதியிலும் தர்க்க ரீதியிலும் மிக மிக முக்கியமானவை. 70 ஆண்டுகளை தாண்டிய அரசியல் பயணத்தை முடித்து தனது 89 வது வயதில் 1998 மார்ச் 20 அன்று மறைந்த இ எம் எஸ் இறந்தபோது அப்போது கேரள முதலமைச்சர் ஆக இருந்த ஈ கே நாயனார் தனது ஈடு இணையற்ற தோழருக்கு “லால் சலாம் இ எம் எஸ்” என்று தழுதழுத்தவாறு கொள்கை வணக்கம் செலுத்திய செய்தி அப்போது எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.

மலையாள இலக்கிய உலகில் இலக்கிய விமர்சனம் என்கின்ற புதிய வகைமையை உருவாக்கி மலையாள இலக்கிய உலகின் செழுமையை வடிவமைத்தவர். மாற்றுக் கருத்திற்கு கடுமையாக மதிப்பளிப்பவர். ஒருமுறை அருந்ததிராய் எழுதிய “சின்னஞ்சிறு விஷயங்களின் கடவுள்” (God of Small things -தமிழில் காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நாவலில் இ எம் எஸ் அவர்களை ஒரு ஹோட்டல் முதலாளி போல உருவகம் செய்ததற்கு கேரளா முழுக்க கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது எதிர்ப்பினை கடுமையாக கண்டித்து அந்த மாற்றுக் கருத்தினை மதித்து ஏற்றவர். அவர் பிறந்த நம்பூதிரி சமூகத்தில் அணிவிக்கப்பட்ட பூணூலை அறுத்து சமபந்தி உணவு அருந்தி சாதியால் விலக்கம் செய்யப்பட்ட இ எம் எஸ் எதற்காக சொந்த சாதியிலேயே மணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனமும் அதற்கு அவர் அளித்த பதிலும் மிக முக்கியமானவை. நம்பூதிரி சாதியில் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நாயர் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் தன் சாதிக்கு எதிரான ஒரு கலகத்தை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நான்காவதாக பிறந்த இஎம்எஸ் தன் மனைவியான ஆர்யாவை மணந்தார் என்கிற விளக்கம் ஜெயமோகன் போன்றவர்களால் வைக்கப்பட்டாலும் இ எம் எஸ் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட விதம் அவரை தனித்துவமாக காட்டுகிறது.

தமிழகத்தை பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலத்தில் தனது தொப்புள் கொடி உறவுகள் சிங்கள பேரினவாதத்தால் கொலை செய்யப்படும் அவலத்தை தாங்க முடியாமல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மக்களை கூட்டி பேசினார் என்பதற்காக மூன்று முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழாக கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தார். தற்போது நடக்கின்ற “திராவிட மாடல்”(?) ஆட்சியில் கூட

ஆட்சியை விமர்சித்து யூட்யூப் வீடியோ வெளியிட்டார் என்ற காரணத்திற்காக தம்பி சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எதிர்த்து விமர்சனம் செய்கிறார் என்ற காரணத்திற்காக சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

அதேபோல இ எம் எஸ். அவரது “வேதங்களின் நாடு” என்கின்ற நூல் இடதுசாரி ஆதரவாளர்களாலேயே கடுமையாக எதிர்க்கப்பட்ட நூல். அதேபோல “மார்க்ஸ் பார்வையில் இந்தியா” என்கின்ற நூலும். “இந்திய வரலாறு” என்கின்ற நூலும் காந்தி பற்றிய விமர்சன நூலான “மகாத்மாவும் அவரது இசமும்” என்கிற நூலும் மிக மிக முக்கியமானவை. இவை தமிழிலும் கிடைக்கின்றன. தன் இறுதி சடங்கில் கூட அரசு மரியாதையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத இ எம் எஸ் எளிமை தமிழ்நாட்டில் கனவிலும் கூட நினைக்க முடியாது.

ஆனால் இங்கே

எந்த ஆய்வுகளும், அறிவு ரீதியான தர்க்கங்களும் இல்லாத, பெரும்பாலும் பிற நூல்களைத் தழுவி அல்லது உரை எழுதி சாமர்த்தியமான வார்த்தை விளையாட்டுக்கள் நிரம்பி வழியும் படைப்புகளை தந்த கருணாநிதிக்கு பேனாச்சிலை. கடற்கரை சமாதி. நூலகப் பெயர். அதேபோலத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையிலான வகையறாக்கள். இவர்கள் ஆண்ட தமிழ்நாட்டிற்கு அதே பக்கத்து மாநிலத்தில் தான் இ எம் எஸ் போன்ற அதிமனிதனும் ஆண்டு இருக்கிறார் என யோசிக்கும் போது தமிழர்கள் எத்தகைய சாபம் பெற்றார்கள் என்பதை உணர முடிகிறது.

மூத்த இடதுசாரி தலைவரான ஜோதி பாசு இந்திய நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அதற்கான அனுமதி தர மறுத்து விட்டது. தமிழகத்திற்கு மூப்பனாருக்கு கிடைத்த வாய்ப்பை கருணாநிதி தடுத்தது போல. அதை ஒரு வரலாற்றுக் குற்றமாக வரையறுத்த ஜோதிபாசு இந்திய பெரு நிலத்தில் மிக நீண்ட காலம் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர். ஒருவேளை ஜோதிபாசு இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்று இருந்தால் மோடி போன்ற கொடுமைகளை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அனுபவிக்காமல் கடந்திருப்பார்கள். முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை இ எம் எஸ் எடுத்தது கடுமையான நமது எதிர்ப்பிற்குரியன, தனியே எழுதப்பட வேண்டிய கட்டுரை செய்திகளை கொண்டன என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இ எம் எஸ் ஒரு சகாப்தம் தான்.

இ எம் எஸ் ஜோதிபாசு போன்ற பெரும் தலைவர்கள் இல்லாத இடதுசாரிகள் ஒரு வலுவற்ற படையாக காட்சியளித்தாலும் இன்னமும் இந்த நாட்டில் தொழிற்சங்கங்கள் ஊடாக எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிற முக்கிய அமைப்புகளாக இருக்கின்றன. ஆனால் ஒரு அரசியல் அமைப்பாக இடதுசாரிகள் தங்களது அரசியல் பிழைகள் காரணமாக வலிமை குறைந்து வருவது முதலாளித்துவத்தை வலதுசாரிகளை வலுப்படுத்துகிற இடதுசாரிகள் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கின்ற குற்றம் என்றே கருதலாம்.

குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை திமுக விடமிருந்து கம்யூனிஸ்டுகள் பெற்றார்கள் என்கிற செய்தியை எந்த கட்சியில் இருந்தாலும் சமூகத்தை நேசிக்கும் எவராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. அது ஒரு கையறு நிலை போல கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது போல உணர்வு.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற இந்த 8 ஆண்டுகளில் இந்திய சூழலும் உலக சூழலும் நிறைய மாறி இருக்கின்றன. கடுமையான தோல்விகளுக்குப் பிறகு இடதுசாரிகள் அது குறித்தான ஆய்வுகளை செய்து மீள் எழும்புதலுக்கான தயாரிப்புகளை செய்கிறார்களா என்று செய்திகள் இல்லாத நிலையில், உலகமயமாக்கல், இந்துத்துவம், நாட்டின் பன்மைத் தன்மைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்து, ஜனநாயக மாண்புகளை அழிக்கும் வேலைகள் என வலதுசாரி அமைப்பான பாஜக தனது நீண்ட கால திட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில் தான் இஎம்எஸ் போன்ற வசீகரமான ஒரு இடதுசாரி தலைவர் நாட்டிற்கு தேவைப்படுகிறார். நம் தமிழகத்திற்கு ஒரே ஒரு நல்ல கண்ணு மட்டும் தான். அவரையும் பாஜக சிபி ராதாகிருஷ்ணனிடம் திமுக தோற்கடித்துவிட்டு, அவருக்கே ஒரு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக படம் காட்டியதும், அதை வாங்க மறுத்து, அந்தத் தொகையையும் அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கியதும், நல்லகண்ணு என்கின்ற ஒரு தமிழர் இன்னும் இங்கே இடதுசாரியாக எஞ்சி இருக்கிறார் என்கின்ற ஆறுதலை

இ எம் எஸ் நினைவலைகள் ஊடாக நமக்கு அளிக்கின்றன.

உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

1. அறியப்படாத இஎம்எஸ்.

2. இ எம் எஸ் நம்பூதிரி பாட்-ஆர்.பட்டாபிராமன்

3. இ எம் எஸ்-என் குணசேகரன்.

4. இ எம் எஸ்- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரண்ட் லைன் கட்டுரைகள்.

5. இ எம் எஸ் பற்றிய உரையாடல்கள் ஜெயமோகன்.

All reactions:

33Shankar Chockalingam, தமிழம் செந்தில்நாதன் and 31 others

மே-18.

காலங்கள் கணக்கில்லாமல் கடந்தாலும்,வருடங்கள் வரிசையாக நகர்ந்தாலும் கண் முன்னால் நடந்த நம் இனத்தின் அழிவு,உலராத குருதியாய் உள்ளுக்குள் வடிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடி பாரினை ஆண்ட பைந்தமிழ் இனம்,கேட்பாரும் மீட்பாரும் இல்லாமல்,உலகத்தார் அனைவராலும் கைவிடப்பட்டு அழிந்த கதை உள்ளத்தில் உறைகிறது.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் சொந்த இனம் அழியும்போது,கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத தனம் குற்ற உணர்வாய் இதயத்தில் குமைகிறது.

உடன் பிறந்தவள் உடை விலகினால் கூட மற்றவர் அறியாமல் மறைவாய் சரி செய்த ஒரு இனத்தின் கூட்டம் எதிரி அம்மணமாக்கி சொந்த சகோதரியின் பிறப்புறுப்பை
படம் பிடித்து உலகத்திற்கு ஒளிபரப்பிய கோரம் தாங்காமல் விழிக்குள் சிவப்பை தேக்குகிறது.

நம் உடன் பிறந்த அண்ணன் நம் இனத்தின் மன்னன் பெற்றெடுத்த பாலகன் தன் நெஞ்சில் தோட்டா வாங்கி வீழ்ந்து கிடக்கும் போது இனி இந்த இனம் வாழ்ந்து என்ன பயன் என வினாக்கள் விளைந்து ஆன்மா அழுகிறது.

நம் நாடு என்று நினைத்த இந்திய தேசியம் என் உடன் பிறந்தாரை அழிக்க நின்றதும், இவர்கள்தான் நம்மை காப்பார்கள் என்று நினைத்த திராவிடம் நம் கழுத்தை அறுத்ததும், இப்போது நினைத்தாலும் சினத்தால் சீற்றம் பெருகுகிறது.

நாம் வாழும் காலம் முழுதும் இரவோ பகலோ இந்த வலியோடு தான் வாழ போகிறோம் என்கின்ற நினைவு நித்தம் நெஞ்சுக்குள் சத்தமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

விடுதலைக்காக விண்ணை ஏகிய
மாவீரர்கள் சுவாசித்த மூச்சுக்காற்று
இன்னமும் இந்த உலகில் உலவி
நடந்தவைக்கெல்லாம்
கணக்குத் தீர்க்க
களம் அமைக்க கதைக்கிறது.

தேச கனவிற்காக இன்னுயிரை
ஈந்தவர்களுக்கும்..
இனவாத அழிப்பில் சிக்குண்டு
இன்னுயிரை இழந்தவர்களுக்கும்..
கண்ணீர் வணக்கம்.

⚫️

மணி செந்தில்.
மே 18-2023
தூத்துக்குடி

10827- வெறும் வாக்குகள் மட்டுமல்ல இவை.

????

ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது.

“நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …”

????
உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி பெற்றவர் தான்.
…….

இதுவரை நடந்த தேர்தலில் இந்தத் தேர்தல் மிக மிக வித்தியாசப்பட்டது. ஏற்கனவே திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடித்த திராவிட அறிஞர்களால் ‘ஈரோடு ஃபார்முலா’ என்கின்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஈரோடு கிழக்கு மண்ணில் பிறந்தது.

“சனநாயகத்தினை தாண்டிய மக்கள் உரிமை வேறு எதுவும் இல்லை” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால் கடந்த சில நாட்களாக பட்டப் பகலில்,
நள்ளிரவில், சந்து பொந்துகளில், மக்கள் சாரை சாரையாய் அழைத்து வரப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பட்டிகளில்,
மக்களாட்சி என்கின்ற மகத்தான தத்துவம் ரூபாய் தாள்கள் மூலம் செய்யப்பட்ட கூர்மையான வெட்டரிவாளால் படுகொலை செய்யப்பட்டதை ஊடகங்கள்/ தேர்தல் ஆணையம் /காவல்துறை என அனைத்துமே பதறாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல், பதட்டமில்லாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்ததை
அதே மண்ணில் காசு கொடுக்காமல் வெறும் கொள்கைகளை வைத்து ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

குற்ற உணர்ச்சி என்கிற அடிப்படை மானுட உணர்ச்சியைக் கொன்று விட்ட பிறகுதான் ஒரு திராவிடக் கட்சிக்காரன் பிறக்கிறான் என்பதை ஈரோடு கிழக்கு மண்ணில் சுற்றிக் கொண்டிருந்த கரைவேட்டிக்காரர்கள் எங்கள் கண்முன்னால் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் நாம் தமிழர் இளைஞர்கள் எதற்கும் சளைக்காமல் கண்கள் முழுக்க கொள்கைக் கனல் ஏறிய சூட்டோடு,ஓங்கி உயர்ந்த முழக்கங்களோடு
சுடும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தார்கள்.

தங்குமிடம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லா விடுதிகளிலும் கரைவேட்டிக்காரர்கள் துண்டு போட்டு இடம் பிடித்திருந்தார்கள். இடம் பிடிக்க, பணம் கொடுக்க, அவர்களுக்கு அதிகாரம் என்கின்ற வெறிபிடித்த ஒற்றை நாய் உலவிக் கொண்டிருந்தது.

சரியான உணவும், தரமான இடமும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு இல்லை தான். ஆனாலும் அவர்கள் ஆன்மாவில் அண்ணன் சீமானின் மொழி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அது அவர்களது உறக்கத்தை கொன்று பசியை தொலைத்து விட்டது.

தம்பி இசை மதிவாணன் போன்றோர் அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை எங்கும் அமராமல் ஓடிக் கொண்டிருந்த காட்சியை காணும் போது “எந்த நம்பிக்கை உங்களை இப்படி ஓட வைக்கிறது..” என்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு முறை தனிப்பட்ட முறையில் அவனிடம் கேட்டும் விட்டேன்.
அவனிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அவன் அணிந்திருந்த உடையில் தேசியத் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார். அதுதான் அதற்கான பதில்.

குமரியில் இருந்து வந்த ஹிம்லர்,சட்டக் கல்லூரி மாணவன் அபூபக்கர், கோவை பேரறிவாளன், அனீஸ் பாத்திமா போன்ற எண்ணற்ற இளம் தளிர்கள் இந்தப் போர்க்களத்தில் சளைக்காமல் சண்டையிட்டார்கள்.

…. எல்லாவற்றையும் தாண்டி அண்ணன் சீமான்.
உழைப்பால் உருவேறிய உன்னதன் அவர்.

தம்பி இசை மதிவாணன் போல, மருமகள் பாத்திமா பர்கானா போல ‌ எண்ணற்ற சீமானின் பிள்ளைகள் வீடு வீடாய் சென்று தங்களுக்கான நீதியை, இத்தனை ஆண்டு கால திராவிட, தேசியக் கட்சிகளின் அநீதியை எடுத்து சொல்லி மிக உருக்கமாக வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் தான், பின்னால் வந்த திராவிடத் திருவாளர்கள் வீடு வீடாய் காசு கொடுத்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு முரண்பட்ட காட்சிதான். ஆனால் ஒரே இடத்தில் ஜனநாயகம் இரு முரண்பட்ட முற்றிலும் வேறுபட்ட காட்சிகளை கொண்ட அபத்த திரைப்படமாய் திராவிடத் திருவாளர்களால் மாற்றப்பட்டுவிட்டது.

பிறகு உண்மையான உழைப்பின், ஜனநாயகத்தின் மதிப்பு தான் என்ன.‌.. என்றெல்லாம் விரக்தியின் வானவில் மனதிற்குள் வளைந்து நெளிந்த போது நம்பிக்கைக்கீற்றாய் பலர் களத்தில் ஒளிவிட்டார்கள்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா அவர்களின் கணவர் தம்பி நவநீதனை பற்றி சொல்ல வேண்டும். வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைக்கின்ற ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியை வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, பேரணியின் முன்னும் பின்னும் ஆக ஓடிச்சென்று, ஒழுங்கு செய்து, அனைவரையும் வழிநடத்தி, சக போராளியாக மனைவியை மதித்து, அவன் சாதித்து நின்றது பேரழகு.

மனைவி தாமதமாக வந்தால் “எங்கே சென்று வந்திருக்கிறாய்..?எனக்கான சாப்பாடு எங்கே..? ” என்றெல்லாம் கேட்கின்ற சராசரி ஆண்களுக்கு மத்தியில் அவையத்தில் மனைவியை முன் நிறுத்தி
கணவனுக்கான கடமையை
கண்ணியமாக செய்து கணவன் மனைவிக்காற்றும் உதவி என்பதை புது குறளாக அவன் ஈரோட்டு வீதிகளில் எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா. எல்லா இடத்திலும் தெளிவாக கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி தொகுதிக்கு என்ன செய்யப் போகிறேன் என்ற தீர்வுகளை பற்றி பேசி, அவதூறு பிரச்சாரங்களை போகிற போக்கில் எதிர்கொண்டு, கூட பயணிக்கும் அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்தி, எதிரே நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்களை கூட புன்னகையோடு எதிர்கொண்ட அவளது உறுதி மிக்க மனநிலை, பலரையும் வியக்க வைத்தது.

அற்புதமான பல இளைஞர்களை நாம் தமிழர் கட்சியின் பேரணிகளில் காண முடிந்தது. இரவு தேர்தல் பணிமனைகளில் தூங்கும் போது நடந்து நடந்து வெடிப்பேறிய அவர்களது பாதங்களை பார்க்கும் போது எனக்கு ஏனோ காங்கோ காடுகளில் அலைந்து திரிந்த புரட்சியாளன் சே நினைவுக்கு வந்து போனான்.

உண்மையில் புரட்சிகர மனநிலை என்பது எல்லாவற்றையும் இழக்க துணிவது என்பதைத்தான் சீமானின் தம்பி தங்கைகள் நிரூபித்தார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அரசியல் மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் ஆன தீர்வு என்பதை வாக்காளர்களுக்கு உணர வைக்க அவர்கள் உழைத்த உழைப்பு என்பது ஜனநாயகம் என்கிற மானுட சாசனத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான செய்தி.

எத்தனை தூரம் என்றாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் என்றாலும் கவலை இல்லை, முழக்கங்கள் ஒரு நொடியும் குறையாமல் முழங்கித் தீர்த்து, எதிரிகளுக்கு பயத்தையும், ஈரோட்டு மக்களுக்கு வாக்குக்கான பணத்தையும், அதிகப்படுத்தி கொடுத்தார்கள்.

பதிலாக அவர்கள் முதலில் அவதூறை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். அருந்ததியர் மக்களை வந்தேறி என சீமான் பேசி விட்டார் என பொய்யாக பரப்புரை செய்து நாம் தமிழர் பிரச்சாரங்களில் திட்டமிட்டு கலகங்களை ஏற்படுத்தினார்கள். அடுத்தது வன்முறை. அண்ணன் அன்பு தென்னரசன் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான போது கூட முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையின் கைகள் அதிகாரத்தால் கட்டப்பட்டிருந்தன.

காலை 8 மணிக்கு எல்லாம் மக்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆடு மாடுகளை பட்டி தொட்டிகளில் அடைப்பது போல அடைத்து, பகலெல்லாம் டிவி போட்டுக்காட்டி, ஆண்களுக்கு சாராயம் பிரியாணி கொடுத்து, இரவு 8 மணிக்கு போகும்போது ஒவ்வொருவருக்கும் தலா 2000 பணம் கொடுத்து அனுப்பி கொண்டிருந்தபோது, நாங்கள் எல்லாம் பூட்டிய வீடுகளுக்கு முன்னால் வாக்கு கேட்க முடியாமல் கொளுத்தும் வெயிலில், மங்கிய மாலையில், இரவின் களைப்பில் நம்மை வழி நடத்தும் லட்சிய வெறியோடு நடந்து சென்று கொண்டிருந்தோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், 2 ஆவது வாக்குப் பெட்டியில் 22வது வரிசை எண்ணிலிருந்த தங்கை மேனகா அவர்களுக்கு, விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 நபர்கள் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தில் வந்தவர்களா, தனித் தாதுக்களா, என்றெல்லாம் இன்று இந்த சமூகக் கட்டமைப்பில் யோசிக்க தோன்றுகிறது.

விவசாயி சின்னத்தில் முகமறியா விரல்கள் தொட்ட நொடி எல்லாம் இன்னும் இந்த மண்ணில் மனித உணர்ச்சி சாகாத , பட்டுப் புடவை ஸ்மார்ட் வாட்ச், அண்டா குண்டா, குக்கர்,காசு, சாராயம், பிரியாணி பொட்டலங்கள் என எதற்கும் விலை போகாத மக்கள் திரள் இம்மண்ணிலும் உண்டு என்று நமக்குள்ளும் உயிர்ப்பூ மலர்ந்த தருணங்கள் அவை.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் தங்களது விரல்களை நம்பிக்கையோடு தொட்டு 10827 ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மாற்று அரசியல் புரட்சியை நிறுவிடப் போராடும் ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்திற்கு உண்மையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சூழ்ந்து விட்ட மிகப்பெரிய இருளுக்கு நடுவில் சிறிது வெளிச்சத்தை அளிக்கிறது.

அந்த வெளிச்சக் கயிறு கொண்டு தான் நாங்கள் வெற்றி என்ற சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கி இருக்கிறோம்.உலகில் ஏற முடியாத சிகரங்கள் என எதுவும் இல்லை.உறுதியாக ஒரு நாள் நாங்கள் சிகரம் தொடுவோம்.

இவ்வளவு உழைத்தும் உங்களை நோக்கி வெற்றி வரவில்லையே என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள்.

இதற்கான பதில் எங்களிடம் இல்லை தான். ஆனால் எங்கள் எதிரிகளிடம் உண்டு.

தேர்தல் முடிந்து ஈவிகேஎஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில் நம்ப முடியாமல், மென்று முழுங்கியவாறே, அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டாரே அந்த பதில் தான்.

அந்த பதில்.. 10827.

எல்லா தடைகளையும் தாண்டி 10,827 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்பது போகிற போக்கில் கடந்துப் போகக்கூடிய செய்தி அல்ல.

10827- இது சாதாரண எண்ணிக்கை அல்ல. திமுக/ அதிமுக /காங்கிரஸ் /பிஜேபி என்கின்ற திராவிட தேசிய கட்சிகளை, அடிமனதில் ஆழத்திலிருந்து வெறுக்கின்ற வெறுப்புணர்ச்சியின் கூட்டுத்தொகை.

ஒரு நொடியும் இந்த கூட்டுத் தொகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அதிகார ஆட்டத்தால் பண மழையால் இந்த எதிர்ப்புணர்ச்சி சற்றே மட்டுப்படுவது போல தோன்றலாம்.

ஆனால் காலங்காலமாய் ஏமாற்றப்பட்டு வருகின்ற மக்களின் கோபம் வன்மமாய் மாறி அது விரல்களின் மூலம் வினை ஆற்ற தொடங்கி இருக்கிறது என்பதையும், ஓடப்பராய் இருந்த ஏழையப்பர்கள் உதையப்பர்களாக மாறி வருகிறார்கள் என்பதையும் 10827 சொல்லத் தொடங்கி இருக்கிறது.

நாம் தமிழர் காலம் பிறக்கிறது.

????

ஈரோடு கிழக்கில் வென்றார் அண்ணன் சீமான்..

????

ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.
ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன.

ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் கட்சியும் ஓட்டு கேட்க முடியாத ஜனநாயக படுகொலையை திமுக காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக இதற்குப் போட்டி போட முயன்று அதிகாரம் இல்லாத காரணத்தினால் வாக்கிற்கு பணம் மட்டும் கொடுத்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறது.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஆளும் திமுக கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. கொலை வெறி தாக்குதலில் சிக்குண்ட அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு இந்த நொடி வரை தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற நிலையிலிருந்து திமுக அரசின் அதிகார ஆதிக்கத்தின் உச்ச கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். வழக்கறிஞர் என்ற முறைமையில் நான் அனைத்து காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டுக் கூட இன்னும் நீதி கிடைத்த பாடில்லை.

ஆனாலும் சீமானின் தம்பி தங்கைகள் இதற்கெல்லாம் சோர்ந்து போகிறவர்கள் அல்ல. நேற்றைய முன் தினம் எங்கள் அண்ணன் அன்பு தென்னரசன் தாக்கப்பட்டதற்கு
பதிலடியாக பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான புலிக்கொடி பேரணியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலையில் ஏறக்குறைய 5 மணி நேரம் நாம் தமிழர் கட்சி நடத்தியது. ஏறக்குறைய எதிர்க்கட்சியான அண்ணா திமுக போட்டியிலிருந்து விலகி விட்ட இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் களத்தில் திமுகவின் அதிகார பலத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நாளைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் பிரச்சாரத்திற்கு வருகின்ற நிலையில், உண்மையான எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது.

எப்பேர்ப்பட்ட மோசமான உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர ஈரோட்டுக் கிழக்கு தொகுதிக்கு வந்து பாருங்கள். அண்ணன் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுங்கட்சியின் பண பலத்தினால் அதிகார ஆட்டத்தினால் நட்ட நடு வீதியில் கொளுத்தப்படுகின்ற காட்சியை நீங்கள் கண்ணால் காணலாம்.

எந்த வீட்டிலும் வாக்காளர்கள் இல்லை. வாக்காளர்களை எல்லாம் கடத்திச் சென்று திமுக காங்கிரஸ் கூட்டணி மண்டபங்களில் அடைத்து வைத்து இருக்கிறது. பிறகு தேர்தல் ஆணையம் என்ற ஒன்று என்ன செய்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

அது ஆளுங்கட்சிக்கு பக்கபலமான வாத்தியமாக செயல்பட்டுக் கொண்டு அதிகார ஆணவத்தை மீறி ஓட்டு கேட்கின்ற நாம் தமிழர் கட்சியை முடக்குகிற வேலையை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டு எஜமான விசுவாசம் காட்டிக் கொண்டு நிற்கிறது.

இதற்கு நடுவில் எளிய இளைஞர்கள் சீமானின் தம்பி தங்கைகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல், உணவு கூட சரியாக உண்ணாமல் இலட்சிய வெறி கொண்டு சாலைகளில் அலை அலையாய் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பணம் அதிகாரம் அரசியல் என முற்றிலுமான சீர்குலைந்து போன உலகில் கொள்கை கூட்டமாய் உலா வருகின்ற சீமானின் தம்பி தங்கைகள் விழிகள் உறங்கா சிவப்பைக் கொண்டு கனலேறி கிடக்கிறது.

சீனப் புரட்சியாளன் மாவோ மக்களை அணி திரட்டி மாபெரும் நடை பயணத்தை நடத்தியது போல இந்த வரலாற்று வீதியில் ஒரு புரட்சிகர படையணியை உருவாக்கி அண்ணன் சீமான் சகல விதமான சர்வாதிகாரத்திற்கும் எதிராக போரிட்டு வருகிறார்.

ஒரு நாளும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பெருகின்ற மக்கள் ஆதரவு ஆளும் திமுக கட்சியை பயத்தில் ஆழ்த்தி இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் இறுதியாக அவதூறு பிரச்சாரத்தை எளிய மக்களை தூண்டிவிட்டு முன்னெடுக்க முயன்று தோற்று இருக்கிறார்கள். பேசாத ஒன்றை பேசியதாக சொல்லி ஆளும் திமுகவினர் நடத்திய நாடகங்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு விட்டன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்..

ஜனநாயக ரீதியில் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வென்றுவிட்டார்.

இலட்சிய பற்றுறுதி
கொண்ட அவரைப் போன்ற ஒருவரை திமுக தன் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறது.

????

ஈரோடு கிழக்கு மண்ணில் இருந்து ..

மணி செந்தில்.

நவம்பர் -26 தலைவர் பிறந்தநாள்

வனமேறி நின்ற
அந்த புலியின்
கண்கள்
ஆதி முருகன்
சாயல் ஒத்தவை
என பார்த்தோர்
பதற சொன்னார்கள்.

சினமேறி நின்ற
அதன் சீற்றம்
அறிந்தோர்
அது வெறும்
வனமேறிய புலி
அல்ல..
அது மூத்த குடி
சுமந்த கனவு
என கண்டார்கள்.

கார்த்திகை இரவில்
காந்தள் மலர் பூட்டி
சன்னதம் வந்து
முழங்கிய முதியவன்
ஒருவன் கம்பீரமாய்
சொன்னான்.

அது கனவும் அல்ல ,
நினைவின் சினமும் அல்ல,
அது
இனம் வணங்கும்
இறை என்று.

திசை அறியும் திசைக்காட்டி.

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு.

தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் கதவுகளை தன் அனல் தமிழால் எட்டி உதைத்து
மூடப்பட்ட கதவுகளை திறக்கும் பேரொசையால் அரசியல் களங்களை நிறைத்தவன் அண்ணன் சீமான்.

எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற தீவின் பிரச்சனை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இல்லை.. இல்லை.. அது என் மற்றொரு தாய் நிலத்தின் விடுதலைப் போராட்டம் என முழங்கியவன் அவன்தான்.

விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என முழங்கிய தலைவர்கள் மத்தியில் புலிகள் எங்கள் உடன் பிறந்தவர்கள், தமிழர்கள் புலிகளின் புதல்வர்கள் என முழங்கியவன் அவன் தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , அவர் வீரம் செறிந்தவர் என்றெல்லாம் பேசிய தலைவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் என் அண்ணன், என் உடன் பிறந்தான் என முழங்கி தமிழகத்து வீதிகளில் இன உணர்வு தீப்பற்ற வைத்தவன் அவன் தான்.

அவன் பார்க்காத விமர்சனம் இல்லை. அவன் சந்திக்காத எதிர்ப்பு இல்லை.

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு கூட்டணி கண்டு 63 இடங்களில் ஆர்ப்பரித்து நின்ற போது, இப்போது நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி அப்போது இல்லை தான்.

ஆனாலும் தனி ஒருவன் அவன் அசரவில்லை. ஓயாமல் அவன் ஓடி ஓடி ஓங்கி அடித்த அடியில், அவன் போக முடியாத ஐந்து தொகுதிகளை தவிர, 58 தொகுதிகளில் காங்கிரஸ் காணாமல் போனது பழைய வரலாறு.

இயக்கமாக இருந்த போது இன்னும் சில காலம் இருப்பார்கள் சில்லறையாய் சிதறுவார்கள் என்றார்கள். கட்சியாய் மாறிய போது இதுவெல்லாம் சில காலம் தான்.. காணாமல் போய்விடுவார்கள் என்றார்கள். தேர்தலில் நின்ற போது பத்தோடு ஒன்று என்றார்கள்.திமுகவை எதிர்த்த போது இத்தோடு இது ஒன்று என்றார்கள். திராவிடத்தை எதிர்த்த போது பாஜகவின் B டீம் என்றார்கள்.பாஜகவை எதிர்த்த போது இதுவும் இன்னொரு திராவிடக் கட்சி தான் என்றார்கள்.

சாதி மறுப்பு பேசியபோது அதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றார்கள். மதம் கடந்து தமிழராய் இணைத்த போது இதுவெல்லாம் ஆகாத வேலை என்றார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல..

“அப்படி என்றால் அதுவும் தப்பு.. இப்படி என்றால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.”

????

ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கும் போது அண்ணன் சீமான் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் தான் கொண்ட தத்துவத்திற்கு, தான் நிக்கிற லட்சியப் பாதைக்கு அவர் நேர்மையாக நிற்கிறார்.

அவர் அண்ணன் திருமாவளவனோடு எதில் இணைய வேண்டும் எதில் இணையக் கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக தனியாக நின்று என்ன புடுங்க போகிறாய் என கேட்ட அண்ணன் திருமாவிற்கு ,எம் அண்ணன் சீமான் சொன்ன பதில் ” எனக்கு என்ன அவர்கள் போதித்தார்களோ அந்த பாதையில் தான், அவர்கள் விலகினாலும் நான் தொடர்ச்சியாக பயணிக்கிறேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பதக்கம் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளும் மாணவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் பதக்கம் பெறுகிறார்கள்.”

இந்தப் பக்குவம் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் செய்து தன்னிச்சையாக உறுதியாக களத்தில் நிற்கிற அண்ணன் சீமான் இறுதியாக கண்டடைந்த நிலை.

தன் இலட்சியப் பயணத்தை பிறர் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் தொடங்கிய அவருக்கு அது எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் உண்டு.

எனவே இங்கு போதனைகள் தேவையில்லை.

எத்துயர் வந்தாலும், எந்நிலை தாழ்ந்தாலும் அண்ணன் கரம் பற்றி தடம் மாறாமல் பயணிக்கும் பேராற்றல் சாதனைதான் வேண்டும்.

அந்த நம்பிக்கை தான் இந்த 12 வருடங்களில் தடம் மாறாமல், தடுமாறாமல் பயணித்து அவர் சம்பாதித்தது.

அழைத்துச் செல்லும் அண்ணன் சீமான் அறிவார் அனைத்தையும்.

அவர் உறுதியாய் வெல்வார் தமிழர் மனத்தையும்.

எனவே .
ஏன் அப்படி செய்கிறார், ஏன் இப்படி செய்கிறார் என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி அவர் பாதையில் நாம் திசைக் காட்டிகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் பயணத்தில் அவரே பாதை. அவரே திசைக்காட்டி.

அமைதி கொள்க அனைவரும்.

சீமான் எனும் சொல்வல்லான்.

அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார்.

சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதை தன் பேச்சுத் திறனால் மேம்படுத்தி எளிமைப்படுத்தி சொல்கிற திறன் கொண்ட ஒரே ஆளுமையாக அண்ணன் சீமான் தான் இருக்கிறார்.

அவரது பேச்சை பாராட்டுவதற்காக உரை முடிந்த பிறகு எடுத்துப் பேசினேன். இப்போது அந்தப் பேச்சின் தொடர்ச்சியை அதே உத்வேகத்தோடு என்னோடு அவர் விவாதிக்க தொடங்கினார்.
என்னோடு பேசும் போது சிறியதே அழகு என்ற நூல் தொடங்கி தி ஸ்பீச் ஆஃப் சரண்டர் என்கிற நூல் வரை பல விஷயங்களைப் பற்றி தெளிவாக உரையாடுகிறார். எங்கள் உரையாடலில் ஊடே என்னை அப்படியே தொடர்பில் காத்திருக்க சொல்லி அவரை சந்திக்க வருபவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் எந்த புள்ளியில் உரையாடல் நின்றதோ அதே புள்ளியில் அவர் தொடங்கி பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு அவைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை அவர் கடுமையாக திட்டமிடுகிறார்.
அவர் அடிக்கடி சொல்வது போல
“கடுமையான பயிற்சி, எளிதான வெற்றி.”

இன்னும் பல மணி நேரம் பேசுவதற்கான தகவல்களோடு அவர் தயாராகி வந்திருக்கிறார். கடும் வாசிப்பு மற்றும் உழைப்பின் வாயிலாக அடைந்த மேன்மை அது.
இரவு பகலாக குறிப்புகள் எடுத்து ஒவ்வொரு அரங்கிற்கும் அவர் தயாராகும் முறைமை போர்க்களத்திற்கு தயாராகும் திறன்பட்ட அரசனுக்குரியது.

அண்ணன் சீமானிடம் எனக்குக் கவர்ந்த பிடித்தமான விஷயம் எதுவெனில் அவருடைய கடும் வாசிப்பு. சில நேரங்களில் நான் மிரண்டு போயிருக்கிறேன். அரசியல் தொடங்கி சூழலியல், நவீன இலக்கியம், சங்க நூல்கள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள், வரலாற்று ஆய்வுகள், பாவாணர் ஆய்வுகள் என எல்லாவற்றையும் படிக்கிற திறன். படித்தவற்றை உரிய இடத்தில் பயன்படுத்துகிற பாங்கு. கடுமையான அந்த நினைவாற்றல். இதையெல்லாம் ஒன்று சேர்க்கும் அந்த யுக்தி. இவைகள் தான் மற்ற தலைவர்களை தாண்டி அண்ணன் சீமானை பலராலும் வியக்க வைக்கிறது. விரும்ப வைக்கிறது. பொறாமையினால் எதிரிகளை அதிகம் சம்பாதித்து தருகிறது.

முடிவாக எனக்கு ஒன்று தோன்றியது.

அண்ணன் சீமானை வெல்வதற்கு அவரைப் போலவே படிக்க, பேச, உழைக்க, பல்கலைக்கழக வகுப்பு போல புள்ளி விபரங்களோடு வகுப்பு எடுக்க, நெருப்பு தமிழில் உரையாற்ற,
இன்னொரு சீமான் தான் வேண்டும்.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் சமகாலத்தில் அப்படி யாரும் இல்லை என்பது தான் நமது பலம்‌.

அந்த பலத்தோடு நாம் எதிரியோடு மோதுவோம்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.-குறள்‌

அண்ணன் சீமான் என்னும் சொல்வல்லான்.

நெல்லையில் நடந்த தமிழக மக்கள் தன்னுரிமை மாநாட்டில் அண்ணன் சீமான் அவர்கள் நிகழ்த்திய இன்றைய மிக அற்புதமான பேச்சு இதோ‌..

Page 2 of 15

Powered by WordPress & Theme by Anders Norén