வழி தொலைத்த கதவு.
கவிதைகள் /உனக்கும்எனக்கும் நடுவேகைப்பிடி இல்லாஒரு கதவு. அடிக்கடிகதவுபூட்டப்பட்டிருப்பதைநாம் இருவருமேஉறுதி செய்துகொள்கிறோம். இருபுறமும்பூட்டப்பட்ட பூட்டுக்களின்உறுதியைஅடிக்கடிஇழுத்துப்பார்த்துபரிசோதிக்கிறோம். என் சாவி உன்னிடமும்,உன் சாவி என்னிடமும்,இருப்பதுநன்றாக தெரிந்தும்தொலையாத சாவியைதொலைத்து விட்டதாகதேடிக் கொண்டிருக்கிறோம். கதவு முழுக்கதுளை போட முயன்றதழும்புகள். குளிர்காலபின்மாலையில்கதவின் இடுக்கில் இருந்துசெந்நிற வெளிச்சம்கசிவதை அச்சத்துடன்பார்க்கிறேன். பாசிப்படர்ந்தஅந்தக் கதவின் மேல்நீலக்கடல்ஒன்றின் படம்வரையப்பட்டு இருக்கிறது. உடலில்கருஞ்சிவப்புக்கோடுகளோடுஒரு வெள்ளை மீன்அதில் நீந்துவது போலஎன்னைபார்த்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக மறுபுறத்தில்இதே போலஇன்னொரு மீனும்உன்னையும்பார்த்துக் கொண்டிருக்க கூடும். நள்ளிரவின் திடுக்கிடலில்பின் கழுத்து வியர்க்கநான் விழித்துப் பார்த்த போதுஅந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது. …
Continue reading “வழி தொலைத்த கதவு.”
48 total views